காலி ஆயர் இல்லத்தில் எட்டு பாதிரியார்களுக்கு கோவிட் தொற்று
காலி மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ரேமண்ட் விக்ரமசிங்க மற்றும் பிற எட்டு பாதிரியார்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
காலி ஆயர் இல்லத்தில் இவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக காலி மருத்துவ அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஆயர் மற்றும் பாதிரியார்கள் ஹிக்கடுவயில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள கோவிட் சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை ,ஆயர் இல்லத்தின் இரண்டு ஊழியர்களும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் உனவட்டுனவில் உள்ள ஒரு சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஆயர் விக்ரமசிங்க வெளியிட்ட ஒரு சிறப்பு அறிக்கையில், ஆயர்
இல்லம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
"இந்த தொற்றுநோய் எப்போது நிறைவுக்கு வரும் என்று தெரியாது, ஆனால் நாங்கள்
அதனுடன் வாழ வேண்டியிருக்கும் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.