மாகாணத்தின் அதிகாரங்களை மத்திக்கு கொண்டு வருவதில் புதிய அரசாங்கம் முனைப்பு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடல்!
மாகாணத்தில் உள்ள அதிகாரங்களை மத்திக்கு கொண்டு செல்வதில் புதிய அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்று(18.06.2026) யாழ்ப்பாண கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தி குழுக் கூட்டம்
நேற்றைய தினம் தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை மாகாண அரசிடம் இருந்து முழுமையாக மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்ததனை தொடர்ந்து மாகாண அதிகாரம் அனைத்தையும் மத்திக்கு கொண்டு செல்லும் நோக்கில் குறித்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அதனை தேசிய வைத்தியசாலையாக உயர்த்த வேண்டும் என்ற கருத்தினை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றவில்லை.
தேவையான வசதிகளை போதனா வைத்தியசாலைக்கு வழங்கவில்லை. போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்படும் அபிவிருத்திகள் அனைத்தும் புலம்பெயர் தமிழர்களால் தமது நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அபிவிருத்திகள்.
எனவே அரசாங்கம் வடக்கில் உள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யாது அனுராதபுரம் வைத்தியசாலையினை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
செம்மணி அகழ்வாராய்ச்சி
இந்த அரசாங்கம் மத்திய அரசுக்கு கீழுள்ள அதிகாரங்களைக் கூட வழங்காது புறக்கணித்து வருகிறது. செம்மணிக்கு நிதி அமைச்சர் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

380 மேற்பட்ட என்புக் கூடுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இதனைத் தாண்டி முழுமையாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு 600 வரையான என்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்படும்.
இனப்படுகொலை நடைபெறவில்லை என்று சொல்கிற அரசாங்கம் செம்மணியில் காணப்படும் என்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இனப்படுகொலைகள் கொத்துக் கொத்தாக இடம்பெற்றது என்பதனை நிரூபிக்க முடியும். அதனை இவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan