தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவு
தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. இதன்போது செயலாளர் பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இறுதியில் வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை,கட்சியின் ஊடக பேச்சாளராக சுரேன் குருசாமி தொடர்ந்து பயணிக்கவுள்ளதாக கட்சியின் பொதுக்குழுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri