தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவு
தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. இதன்போது செயலாளர் பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இறுதியில் வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை,கட்சியின் ஊடக பேச்சாளராக சுரேன் குருசாமி தொடர்ந்து பயணிக்கவுள்ளதாக கட்சியின் பொதுக்குழுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 17 மணி நேரம் முன்

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
