வடக்கு மாணவர்களின் உயர் கல்வி தொடர்பில் ஆளுநரின் புதிய திட்டம்(Photo)
சிங்கப்பூரில் அமைந்துள்ள ஆசியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழங்களில் ஒன்றாக விளங்கும் நன்யாங் பல்கலைக்கழகத்துடன் வடக்கு மாணவர்களுக்கு உயர் கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு இணைந்து பணியாற்ற வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா திட்டமிட்டுள்ளார்.
ஆளுநரின் சிங்கப்பூர் விஜயம்
சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாடு ஒன்றுக்காக கலந்துக்கொள்ள சென்ற வடக்கு ஆளுநர் அங்கு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் சுமார் 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் சிங்கப்பூரின் பிரபல்யம் வாய்ந்ந ஆசியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் நன்யாங் பல்கலைக்கழகத்திற்கு கடந்த புதன்கிழமை ஆளுநர் விஜயம் செய்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப துறை
குறித்த பல்கலைக்கழகத்தில் வடக்கில் தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்து
விளங்கும் மாணவர்களுக்கு உயர் கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கும்
பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியை வடக்குக்கு பெற்றுக் கொள்வதற்கும்
ஆளுநர் திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



