மாதகல் காணி தொடர்பில் வட மாகாண ஆளுநர் மக்களுடன் கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் கடற்படையினரின் பயன்பாட்டுக்கென அளவீடு செய்ய முற்பட்ட காணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
காணி உரிமையாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் இதன்போது தனித்தனியாக கலந்துரையாடிய வட மாகாண ஆளுநர் காணி உரிமம் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
சிலருடைய காணிகளுக்கான சட்டரீதியான உரிமங்கள் இல்லாமை ஆளுநரால்
அவதானிக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சங்கானை மற்றும்
தெல்லிப்பளை பிரதேச செயலாளர்களை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்
வழங்கியுள்ளார்.