இலங்கையில் கட்டாயமாக்கப்படும் முறைமை! எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறை
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை அறுபதாக வரையறுத்து அரசாங்கம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்த தீர்மானம் எதிர்வரும் 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி 55 வயது பூர்த்தியாகின்ற போது அல்லது அதன் பின்னர் அரசாங்கத்தின் எந்தவொரு ஊழியரையும் ஓய்வுபெறுவதற்கு பணிக்க முடியும்.
தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரால் சேவையில் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டாலன்றி அரசியலமைப்பின் மூலம் அல்லது ஏதேனும் சட்டத்தின் மூலம் கட்டாயம் ஓய்வுபெறும் வயது குறிப்பிட்டுள்ள ஊழியர்கள் 60 வயது பூர்த்தியடையும் போது கட்டாயம் சேவையிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென அதிவிசேட வர்த்மானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri