அரச ஊழியர்களுக்கான விடுமுறை கொடுப்பனவு! வெளியான அறிவிப்பு
அரச ஊழியர்களுக்கான விடுமுறை கொடுப்பனவுகள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி அனைத்து அரச நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுமுறை கொடுப்பனவுகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை திறைசேரியின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கை மூலம் அறிவிப்பு

அனைத்து அமைச்சுகள், அரச கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் அரசிற்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு சிறப்பு சுற்றறிக்கை மூலம் திறைசேரியின் செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.
குறித்த சுற்றறிக்கையில் கூறப்பட்ட பொது நிறுவனம் மூலதனம் அல்லது தொடர் செலவினங்களுக்காக திறைசேரியிலிருந்து நிதியைப் பெறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri