மதுபான கடைகளை திறந்து நாடாளுமன்றத்தை மூடும் அரசாங்கம்
அரசாங்கம் மதுபான கடைகளை திறந்து, நாடாளுமன்றை மூடுவதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல ( Laksmaṉ kiriyalla ) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் நாளுக்கு நாள் பாரியளவில் பிரச்சினைகள் அதிகரித்துச் செல்கின்றது. சபாநாயகர் அவர்களே, நாளையும் நாளை மறுதினமும் நாடாளுமன்ற அமர்வுகளை ரத்து செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டிலும் 25 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவில்லை. கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டால் ஏன் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் நாடாளுமன்ற அமர்வுகள் இரண்டு நாட்களுக்கு வரையறுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.