ஜனநாயக விரோத செயற்பாட்டில் அரசாங்கம் - ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
ஜனநாயக முறையிலான ஆர்ப்பாட்டங்களை நசுக்க முற்படுவதும், பெருந்தொற்றை காரணம் காட்டி தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்துவதும் ஜனநாயக விரோத செயற்பாடென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும்,
கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகே இடம்பெற்ற கல்விசார் ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் உட்படப் பலர் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
எனினும் தனிமைப்படுத்தல் சட்டத்தினை காரணம் காட்டி தன்னிச்சையான முறையில் ஜோசப்ஸ்டாலின் உட்பட குழுவினர் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமான ஜனநாயக மறுப்பு நடவடிக்கையாக அமைகின்றது.
இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்களை விடுதலை செய்யுமாறு கோருகிறோம், இலங்கையின் அரசியலமைப்பு ஏற்றுக் கொண்டுள்ள தொழிற்சங்க உரிமைகளின் அடிப்படையிலேயே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
இவற்றை நசுக்கமுற்படுவதும், கோவிட் பெருந்தொற்றை காரணம் காட்டி, தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்துவதும், ஜனநாயக விரோத செயற்பாடாகவே அமைகின்றது.
நிர்வாகத்திற்கு இடையூறு இல்லாமல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகநீதிக்காக இடம்பெற்ற இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஜோசப் ஸ்ராலின் உட்படக் குழுவினரைத் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பதோடு, தொழிற்சங்கங்களின் ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளிற்கு அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரி நிற்கின்றோம்.
அத்துடன் ஆசிரியர்களாகிய நாம் இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவர் விடுவிக்கப்படும் வரை மாணவர்களின் ஒண்லைன் வகுப்புக்களினை புறக்கணிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சற்றுமுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்! முதல் வாரத்திலேயே அதிர்ச்சி Cineulagam
