அவரவர் விரும்பும் தடுப்பூசியினை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - விசேட கோரிக்கை
20 தொடக்கம் 29 அகவைக்கு உட்பட்ட இளைஞர் யுவுதிகளுக்கான தடுப்பூசி செலுத்துவதில் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் பாரிய பின்னடைவினை சந்தித்துள்ளார்கள் என்றும் இதனை மாற்றி அமைக்கவேண்டும் எனவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுயன்சன் (S. Suyanson) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் கோவிட் - 19 தொற்றின் பரவலால் மக்கள் இயல்பு வாழ்வினை இழந்துள்ளார்கள். இந்த கொடிய தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க பல தடுப்பூசிகளை ஏற்றப்பட்டு வருகின்றது.
குறிப்பாக சினோபாம் எனப்படும் தடுப்பூசி முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் செலுத்தி வருகின்றார்கள்.
இதில் 20 தொடக்கம் 29 அகவைக்கு உட்பட்ட இளைஞர் யுவுதிகளுக்கான தடுப்பூசி செலுத்துவதில் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் பாரிய பின்னடைவினை சந்தித்துள்ளார்கள்.
இளைஞர்கள் மத்தியில் இந்தவகையான தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதில் முழுமையான விருப்பம் இன்மையே காரணம். இதற்கு இந்த அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் அவரவர் விரும்பும் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இல்லாவிட்டால் அதற்கு மாற்று வழியாக அவர்கள் சொந்த செலவில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள உகந்தவகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எதிர்கால சந்தியினரை பாதுகாப்பதற்கு அவரவர் விரும்புகின்ற தடுப்பூசியனை பெற்றுக்கொடுக்க வேண்டுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.