அரசாங்கம் பதவி விலக வேண்டும் - சஜித் பிரேமதாச
இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டுமேன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காரணமாக மக்கள் நிர்க்கதியாகியுள்ள நிலையில் எரிபொருள் விலையை உயர்த்தியமை தொடர்பில் ஒருவரின் மீது குற்றம் சுமத்துவதனை தவிர்த்து ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டுமென தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்த்துவதற்கு எடுக்கப்பட்ட எதேச்சாதிகார தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதனை தவிர அரசாங்கத்திற்கு வேறு மாற்று வழிகள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்களின் கழுத்தை நெரித்துவிட்டு அந்த பழியை ஒருவரின் மீது சுமத்துவது ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விடுத்துள்ள கோரிக்கையின் மூலம் ஆளும் கட்சிக்குள் நிலவி வரும் உட்பூசலின விசாலாம் தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வலுவிழந்து வருகி;ன்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.