முட்டாள்தனமான தீர்மானங்களால் நாட்டையே தீக்கிரையாக்கியுள்ளது அரசு! சாடுகின்றார் நளின் பண்டார எம்.பி
"காபனிக் உரப் பிரச்சினையால் முழு நாடும் பற்றி எரிகின்றது. முட்டாள்தனமான முடிவுகளால் நாட்டையே அரசு தீக்கிரையாக்கியுள்ளது." என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
"உரப் பிரச்சினை காரணமாக விவசாய நிலங்கள் தீயில் எரிகின்றன. விவசாயிகளின் வயிறும் எரிகின்றது. அதுமட்டுமன்றி சமையலறை தீப்பற்றி எரிகின்றது. முட்டாள்தனமான முடிவுகளால் நாட்டையே தீக்கிரையாக்கியுள்ளனர்.
மரத்தின் வேர்கள் வலுவிழக்கும்போது, கிளைகளைச் சபிப்பது பயனற்றது. அங்கு முழு அமைப்பும் உடைந்து விடுகின்றது.
ஜனாதிபதி, அதிகாரிகளைத் திட்டுவதில் அர்த்தமில்லை. ஜனாதிபதியின்
முடிவுகளினாலேயே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan