திருகோணமலை மாவட்டத்தில் அரச சேவைகளைப் பெறுவதில் 64.7% பேர் அதிருப்தி - ஆய்வில் தகவல்

Trincomalee Government Employee
By H. A. Roshan Sep 15, 2026 12:48 PM GMT
Report

அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு செலவிடப்படும் நேரம் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தில் 64.7 சதவீதமான மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக மாற்றுக் கொள்கை நிலையம் (Alternative Policy Centre) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறும்போது பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி அந்தச் சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை ஆராயும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரிடையே சேவைகளைப் பெறுவதில் நிலவும் அதிருப்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

நடத்தப்பட்டுள்ள ஆய்வு

மாற்றுக் கொள்கை நிலையத்தின் IFF நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட “சாமானியனுக்கு மீண்டும்” என்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர், சேருவில மற்றும் பதவிய சிறீபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 530 பேரை உள்ளடக்கியதாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதேச செயலக அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் சேவைகளைப் பெறும் அரச நிறுவனங்கள் ஆய்வுக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் பணியாற்றும் அரச அதிகாரிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்கள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

2026 மார்ச் 1 முதல் ஜூன் 1 வரையிலான காலப்பகுதியில் முறையான பயிற்சி பெற்ற 23 ஆய்வாளர்களைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் அரச சேவைகளைப் பெறுவதில் 64.7% பேர் அதிருப்தி - ஆய்வில் தகவல் | Government Service In Trincomalee District

சேவைகளைப் பெறுவதில் காணப்படும் சிரமங்கள், சேவையைப் பெறும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சேவையைப் பெறுவதற்காக செலவிட வேண்டிய நேரம் தொடர்பான திருப்தி, சேவை வழங்கும்போது வித்தியாசமாக நடத்தப்படுகிறோமா என்பது, தமக்குத் தெரிந்த மொழியில் சேவையைப் பெறுவதற்கான வாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளிட்ட விடயங்கள் ஆய்வின் மூலம் ஆராயப்பட்டுள்ளன.

நடைமுறை ரீதியான தடைகள் 

இதன் மூலம் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெறும்போது எதிர்கொள்ளும் நடைமுறை ரீதியான தடைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 64.3% பேர் சேவைகளைப் பெறுவதில் சிரமம் ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சேவைகளைப் பெறும்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மொத்த பதிலளித்தவர்களில் 64.3 சதவீதமானோர் அரச சேவைகளைப் பெறுவது சிரமமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், 30.3 சதவீதமானோர் மாத்திரமே அந்தச் செயற்பாடு இலகுவாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காகச் சென்ற பலரும் அங்கு சேவை வழங்கும் விதம் தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களின் பற்றாக்குறை, அக்கறையற்ற அணுகுமுறை உள்ளிட்ட விடயங்கள் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. திருகோணமலை பெரிய வைத்தியசாலையில் தனது முதலாவது குழந்தையைப் பிரசவிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட 27 வயதான எஸ். திலக்ஷிகா, வைத்தியர்களின் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவின் பொறுப்பான வைத்திய அதிகாரியின் கவனக்குறைவு காரணமாக தனது முதலாவது குழந்தையை இழந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சேவைகளைப் பெறுவதற்காக பலமுறை அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் மேற்குறிப்பிட்ட அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறுவதற்கு செலவிட வேண்டிய நேரம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர், சேவைகளைப் பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், ஒரே சேவையைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பலமுறை செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியவர்களில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கிண்ணியா இலக்கம் 03, ஹிஜ்ரா வீதி பகுதியைச் சேர்ந்த அப்துல் வஹாப் மொஹமட் என்பவர், கிண்ணியா பெரியவெளி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுப் பாதையை அகற்றுவதற்கு கிண்ணியா பிரதேச செயலக அலுவலகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் அரச சேவைகளைப் பெறுவதில் 64.7% பேர் அதிருப்தி - ஆய்வில் தகவல் | Government Service In Trincomalee District

சட்டவிரோத நடவடிக்கை

“எனது வயல் நிலத்தின் ஊடாக மணல் ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள் மற்றும் டிப்பர் வாகனங்கள் உடனடியாகச் செல்வதை நிறுத்துமாறு கிண்ணியா பிரதேச செயலக அலுவலகத்தில் பல சந்தர்ப்பங்களில் கூறினேன். ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை செய்வதைவிட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிப்பதாகத் தோன்றுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

பணியாளர் பற்றாக்குறையும் மொழிப் பிரச்சினையும் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெறச் செல்லும்போது எதிர்கொள்ளும் மற்றுமொரு முக்கிய பிரச்சினையாக பணியாளர் பற்றாக்குறை இந்த ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லாமை, போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாமை மற்றும் மொழி தொடர்பான பிரச்சினைகள் பொதுமக்களுக்கு கடுமையான தடைகளாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனுடன் தொடர்புடையதாக, உறவினர்களின் செல்வாக்கு மற்றும் போதுமான பௌதிக வளங்கள் இல்லாமை ஆகியவையும் முக்கியமான பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மூதூர் வெல்கட பகுதியைச் சேர்ந்த மங்களகாந்தி என்ற பெண் தனது கிராமம் தொடர்பான பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளார்.

“யுத்த காலத்தில் எங்களுடைய கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் மீண்டும் குடியேறியபோது எங்களுடைய பாரம்பரிய காணிகள் தொடர்பாக பல பிரச்சினைகள் ஏற்பட்டன. எங்களுடைய கிராமம் மற்றும் பாரம்பரிய காணிகள் தொடர்பாக அரச அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்துள்ளோம். ஆனால் எங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

42.2% பேர் வேறுபட்ட முறையில் நடத்தப்பட்டதாக தெரிவிப்பு ஆய்வில் பங்கேற்றவர்களில் 42.2 சதவீதமானோர், இன, மத, பாலினம், சமூக நிலை மற்றும் ஏனைய அடையாளங்களின் அடிப்படையில் தாங்கள் வேறுபட்ட முறையில் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதிலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேறுபட்ட முறையில் நடத்தப்பட்டதாகக் கூறியவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்துள்ளது.

வெள்ளாமலை, கருமலுத்தட்டு பகுதியைச் சேர்ந்த அஹமட் ரஹீம் சன்ரூஸ் என்பவர் தனது காணி தொடர்பான பிரச்சினையை எடுத்துரைத்துள்ளார்.

மொழிச் சேவைகள் தொடர்பில் சாதகமான நிலை

“திருகோணமலை வெள்ளம்வெளி பகுதியில் கடலோரமாக அமைந்துள்ள காணி எங்களுடைய பாரம்பரிய காணியாகும். அதற்கான பழைய உரிமை ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. ஆனால் இராணுவத்தினர் அந்தக் காணியைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்தக் காணிக்குள் செல்லக்கூட எங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. நாங்கள் முஸ்லிம்கள் என்பதால்தான் இவ்வாறு நடத்தப்படுகிறோம் என நினைக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் அரச சேவைகளைப் பெறுவதில் 64.7% பேர் அதிருப்தி - ஆய்வில் தகவல் | Government Service In Trincomalee District

மொழிச் சேவைகள் தொடர்பில் சாதகமான நிலை சேவைகளைப் பெறுவதற்கான அணுகல் மற்றும் காத்திருக்க வேண்டிய நேரம் தொடர்பாக பொதுமக்கள் பரவலான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தாலும், சேவை வழங்கலின் சில குறிப்பிட்ட அம்சங்கள் தொடர்பில் திருப்தி காணப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக மொழி தொடர்பான சேவைகள் குறித்து சாதகமான கருத்துக்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 75 சதவீதமானோர் தங்களுக்கு தேவையான சேவைகளை தாம் விரும்பும் மொழியில் பெற்றுக்கொள்ள முடிவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இருமொழி பேசக்கூடிய அதிகாரிகள் மற்றும் தேவையான ஆலோசனைகள் சில அரச நிறுவனங்களில் கிடைப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த மகிந்த சேனாரத்ன என்பவர், “தற்போது பல வைத்தியசாலைகளிலும் பிரதேச செயலக அலுவலகங்களிலும் எங்கள் மொழியில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். அதேபோன்று ஆவணங்கள் மற்றும் கடிதங்களுக்கு இருமொழிச் சேவையும் வழங்கப்படுகிறது. பொலிஸ் நிலையங்களிலும் முன்பைவிட இந்த வசதி மேம்பட்டுள்ளது. எனவே நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தினரின் அதிருப்தி தொடர்பில் அரசின் கவனம் அவசியம் திருகோணமலை மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட முக்கிய விடயம் என்னவெனில், அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறுவதில் முஸ்லிம் சமூகத்தினரிடையே அதிருப்தி நிலை ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுவதாகும்.

திருகோணமலை மாவட்டத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி முஸ்லிம் மக்கள் தொகை 46.5 சதவீதமாக உள்ளது. இத்தகைய மக்கள் தொகை விகிதத்தைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தினர் அரச சேவைகளைப் பெறும்போது அதிருப்தியடையக் காரணமாக இருக்கும் விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டியதுடன், மேற்குறிப்பிட்ட அரச நிறுவனங்களின் சேவை வழங்கும் முழு நடைமுறையும் மேலும் முறையானதாகவும் திறமையானதாகவும் மாற்றப்பட வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை - காலக்கெடுவுடன் கடுமையாகும் சட்ட நடவடிக்கை

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை - காலக்கெடுவுடன் கடுமையாகும் சட்ட நடவடிக்கை

500 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடு

500 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடு

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US