நாட்டின் செலாவணிக் கட்டமைப்பை பாதுகாக்க அரசாங்கம் தீர்மானம்
நாட்டின் செலாவணிக் கட்டமைப்பை பாதுகாப்பதற்கான கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் வகையில் ஜனாதிபதி முன்வைத்துள்ள அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அந்நியச் செலாவணி அமைப்பில் உள்ள சட்ட ஓட்டைகளை முற்றிலுமாக மூடி, நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச இணக்கத்தை உறுதிசெய்து, வெளிநாட்டுப் பணப் பரிமாற்ற நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை உச்சபட்சமாக கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் கீழ், முன்னர் நாட்டின் சட்டக் கட்டமைப்பிற்கு வெளியே செயல்பட்டு வந்த வெளிநாட்டுப் பணம் அல்லது மதிப்புப் பரிமாற்றச் சேவை வழங்குநர்களை (MVTS) இலங்கை மத்திய வங்கியின் நேரடி மேற்பார்வை மற்றும் பதிவின் கீழ் கொண்டு வருவதற்கான புதிய ஒழுங்குமுறைகளின் தொகுப்பைச் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய ஒழுங்குமுறை
புதிய ஒழுங்குமுறைகளின் மூலம் '2025-ஆம் ஆண்டின் எண் 1' சட்ட ஓட்டைகள் மூடப்படுகின்றன நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தப்பட்ட சட்டக் கட்டமைப்பு, 2005-ஆம் ஆண்டின் 28-ஆம் இலக்க செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டத்தின் விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதாரப் புனர்வாழ்வுச் செயல்பாட்டில், இலங்கையில் அந்நியச் செலாவணி ஈட்டுவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் விளங்குகின்றன.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை
இந்த புதிய கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம் 'ஹவாலா' அல்லது 'உண்டியல்' போன்ற சட்டவிரோத, முறைசாரா மற்றும் இரகசியப் பணப் பரிமாற்ற முறைகளை முற்றிலுமாக முடக்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும்.

இதன் மூலம், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த அந்நியச் செலாவணி, சட்டவிரோத கடத்தல்காரர்களின் கைகளில் செலவதைத் தடுத்து, அவற்றை உத்தியோகபூர்வ வங்கி அமைப்பு மற்றும் உரிமம் பெற்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வழிகளுக்கு (முறைசார் வங்கி வழிகள்) மட்டுமே செலுத்துமாறு வழிநடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சட்டத்தின் இறுதி நோக்கம், உலகளாவிய நிதித்துறையின் நவீனப் போக்குகளுக்கு ஏற்ப இலங்கையின் நிதி ஒழுங்குமுறைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், நிதிக்குற்றங்களைத் தடுப்பதும், சர்வதேச நிதித் தரங்களைப் பேணுவதன் மூலம் நாட்டின் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதும் ஆகும் என்று அரசாங்கம் கூறுகிறது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam