மைத்திரியை சந்தித்த அரசாங்கத்தின் பங்காளி கட்சி தலைவர்கள்! சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்
அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் இன்று பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை (Maithripala Sirisena) கொழும்பில் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பு மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கெரவலப்பிடிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் நேற்று பிற்பகல் கூடி, இந்த செயல்முறையை நிறுத்துவதற்கான அரசியல் முடிவை எடுக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.
இதேவேளை, அரசின் பங்காளி கட்சி தலைவர்கள் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசியுள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் தாக்கம் ஏற்படுத்த கூடும் என அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.