விமான நிலைய வரியை ஆறு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் ஒப்புதல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான வரியை மேலும் ஆறு மாத காலத்துக்கு நீடிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
வாராந்த அமைச்சரவை மாநாட்டில் இன்று (18.07.2023) உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்

மேலும், இந்த விடயம் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப்
போக்குவரத்து அமைச்சர் பந்துல முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கமைய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான வரி தொடர்பில் கால அவகாசம் நீடிப்பதன் மூலம் யாழ் விமான நிலையத்துக்கு ஊடாக பயணிக்கும், பயணிகள் மலிவு விலையில் விமான டிக்கெட்டுகளை வாங்க முடியும் எனவும் மேலும் இது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தையும் மேம்படுத்தும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்;.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam