அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! அரசாங்கத்திற்கு தேவைப்படும் பெருந்தொகை பணம்
அரசதுறையின் சம்பளத்துக்காக மாத்திரம் ஏறத்தாழ ஒரு ட்ரில்லியன் ரூபா தேவைப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடன்களை மீளச்செலுத்துவதில் நாம் பல சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதுடன், அன்றாட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பெருமளவில் நிதி தேவைப்படுகிறது.
எவ்வாறாயினும், உதவிக்கு கூடுதல் செலவு எதுவும் எடுக்கப்படாமல் நாங்கள் மிகவும் சிரமத்துடன் நிர்வகித்து வருகிறோம்.
நிலைமை முற்றாக சீரடைந்துவிடவில்லை
அரசதுறையின் சம்பளத்துக்காக மாத்திரம் ஏறத்தாழ ஒரு ட்ரில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. மிகவும் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களின் நலனுக்காக மாதம் ஒன்றுக்கு 10 பில்லியன் ரூபா முதல் 12 பில்லியன் ரூபா வரை தேவைப்படுகிறது.
இவை அனைத்தும் மாதாந்த நிதித் தேவைகளாகும். ஓய்வூதியக் கொடுப்பனவுக்கும் பணம் தேவைப்படுகிறது.
இவை கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டியவையாகும். இந்தக் கட்டாயக் கொடுப்பனவுகளில் உடல்நலத்திற்காகச் செய்யப்படும் கொடுப்பனவுகள் மற்றும் செலவுகள் சேர்க்கப்படவில்லை, ஆனால் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
திறைசேரியினால் வசூலிக்கப்படும் வருவாய் குறைவாக இருப்பதால், இருதரப்புக் கடன்களுக்கு நாங்கள் சேவை செய்வதில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். பொருளாதாரம் இப்போதுதான் ஸ்திரத்தன்மையைக் காட்டியுள்ளது. எனவே, அதன் ஸ்திரத்தன்மையை நாம் பாதிக்க விடக் கூடாது.
தற்போது, பணவீக்கம் ஓரளவுக்குக் குறைவடைந்துள்ளபோதும், நிலைமை முற்றாக சீரடைந்து விடவில்லை. வட்டிவீதம் 30 ஆகக் காணப்படுகிறது. எனவே, நாங்கள் கடந்து வந்த மிகவும் கடினங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்த நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் பேரில், திறைசேரி அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், இந்த நேரத்தில் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மற்றைய எல்லா சிக்கல்களையும் அதன் பிறகு சரிசெய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri
