அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அரச ஊழியர்கள் பெற்ற கடனுக்கான ஏப்ரல் மாத கழிப்பனவை பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏப்ரல் மாதம் சகல மக்களுக்குமான பண்டிகை மாதம் என்பதனால் இந்தப் பண்டிகைக் காலத்தில் அதிக செலவுகள் ஏற்படுவது இயல்பாகும்.
எனவே கடன் பெற்ற அரச ஊழியர்களின் கடன் கழிப்பனவுகளை தொகை பண்டிகையை கொண்டாட போதுமானதாக இல்லை என பெரும்பாலான அரச ஊழியர்கள் தனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
எனவே, இதனை கவனத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்துக்கான கடன் கழிப்பனவை தள்ளிப்போட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளும் மேற்படி திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
