முகநூல் கணக்குகளை நீக்க அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை - இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம்
உரிமையாளர்கள் இல்லாத முகநூல் பக்கங்களை இடைநிறுத்தவோ அதனைக் கட்டுப்படுத்தவோ இலங்கை அரசுக்கு எந்த அதிகாரங்களும் இல்லை என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சுமார் 20 லட்சம் முகநூல் பக்கங்களுக்கு உரிமையாளர்கள் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எந்த அடிப்படையில் கூறுகிறார் என்பது சிக்கலுக்குரியது என அந்த சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார்.
முகநூல் கணக்குகளை நீக்கவோ, அவற்றை முறைப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கங்களுக்கோ, வேறு அணிகளுக்கோ அதிகாரம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் இப்படியான அறிவிலியான கருத்துக்கள் குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தனது அதிருப்தியை வெளியிடுவதாகவும் குருவிட்டகே குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 14 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
