பாரபட்சமற்ற விசாரணைகள் அவசியம் - கோட்டாபயவுக்கு சென்றது முக்கிய கடிதம் - செய்திகளின் தொகுப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்கள் மீது மட்டுமல்லாமல் பண்டோரா துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்களிடமும் உடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தேசத்தின் பாதுகாப்புக்கான மக்கள் குரல் அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruththettuwe Ananda Thero) வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பண்டோரா துண்டுப் பிரசுரங்களில் 93 இலங்கையர்கள் குறித்து அம்பலப்படுத்தியுள்ளது. 2016 இல் பனாமா ஆவணங்கள் சட்டவிரோத சொத்துக்களை குவித்த 65 இலங்கையர்களை அம்பலப்படுத்தியது.
எனினும், திருக்குமார் நடேசன் (Thirukumar Nadesan) மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ஷ (Nirupama Rajapaksa) ஆகியோருக்கு எதிராக மட்டுமே இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவிட்டார்.
எனவே, தேசத்தின் பாதுகாப்புக்கான மக்கள் குரல் என்ற அடிப்படையில் பண்டோரா மற்றும் பனாமா ஆவணங்களில் பெயரிடப்பட்ட அனைவர் மீதும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
விசாரணையின் பின் சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மோசடி மற்றும் ஊழல் மூலம் சொத்துக்களை தவறாக சேர்ப்பதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட வேண்டும் என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,