தோல்வியில் முடிந்த கலந்துரையாடல்!
அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் நேற்றைய தினம் (14.03.2023) நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கலாநிதி ஹரித அலுத்கே, இந்த சந்திப்பின்போது தொழில் வல்லுநர்கள் தங்கள் தொடரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான உறுதியான தீர்வுகள் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்க கூட்டமைப்பு
இந்தநிலையில், நேற்றைய கூட்டத்தின் பகுப்பாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இன்று 14ஆம் திகதி தீர்வொன்று வழங்கப்படும் எனக் கலந்துரையாடலில் இணைந்த அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர், நிதி
அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் மற்றும் நிதி
அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri