கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரம் முதல் கோழி இறைச்சி கொள்வனவை புறக்கணிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் எச்சரித்துள்ளார்.
அத்துடன், பிஸ்கட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எந்த வழிவகை கையாளப்பட்டதோ, அந்த வழிவகை கோழி இறைச்சி விடயத்திலும் கையாளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிக இலாபம்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், டொலர் மதிப்பிழப்பால் கிடைக்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என கோழி இறைச்சி வியாபாரிகளிடம் கோரப்பட்டுள்ளது.
எனினும் தற்போது உள்ள இக்கட்டான சூழலை பயன்படுத்தி அதிக இலாபம் ஈட்ட வியாபாரிகள் முயற்சிக்கின்றனர்.

இதேவேளை, அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இறக்குமதி செய்யப்பட்ட பழங்களின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஒரு கிலோகிராம் திராட்சைப்பழம் 2,690 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் ஆப்பிள் 2,500 ரூபாவாகவும் விற்பனையாகிறது.
அத்துடன் உள்ளூர் பழ வகைகளின் விலையும் அதிகரித்துள்ளது என்று அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல் News Lankasri