கோழி இறைச்சி மற்றும் முட்டையை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை
கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பவற்றை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கோழி மற்றும் முட்டை தொழில்துறையினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முறையற்ற இலாபம்
மீன் விலை அதிகரிப்பால் கோழி இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதனால், கோழி இறைச்சியின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக வர்த்தகர்கள் முறையற்ற இலாபம் ஈட்டுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட பிரேரணை இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிலைமையைக் கட்டுப்படுத்த வர்த்தக அமைச்சுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri