அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்
2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் அரச துறையில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2.9 சதவீதம் குறைந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2023) இறுதிக்குள், அரச துறையில் பணிபுரிந்த மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,353,860 ஆகும்.
புதிய ஆட்சேர்ப்புகளை தற்காலிகமாக நிறுத்துதல், புதிய பணியிடங்களை உருவாக்குதல் மற்றும் ஓய்வு பெறுதல் ஆகியவை ஊழியர்களின் எண்ணிக்கை குறைவுக்கு வழிவகுத்துள்ளன.
அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள்
மேலும் கடந்த ஆண்டு (2023) இறுதிக்குள், அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் மொத்த எண்ணிக்கையின்படி, பணியாளர்களின் பயன்பாட்டு விகிதம் 77 சதவீதமாக உள்ளது.2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது நான்கு சதவீதம் குறைந்துள்ளது.
அரசு செலவினங்களைக் குறைக்கும் வகையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 12 மணி நேரம் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
