திஸ்ஸ குட்டியராச்சியின் ஊரடங்கு யோசனை! 48 மணித்தியால எச்சரிக்கை விடுத்த நாமல்! பசிலை தவிர்த்த உறுப்பினர்கள்!
ஜனாதிபதியின் கூட்டத்தில் பங்கேற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நடத்திய கூட்டத்துக்கு செல்லவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அரசாங்கக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது தமது தனிப்பட்ட வீட்டுக்கு செல்லும் வழியில் இடம்பெற்ற போராட்டம் மற்றும் அதன்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார்.
இதன்போது எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் கலந்துரையாடப்;பட்டு அதன்படியே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படடது. மூன்று மணி நேரம் இந்த கலந்துரையாடல் நடைபெற்றபோது, திஸ்ஸ குட்டியாராட்சி, தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்தார்
நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் சனி (நேற்று) மற்றும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
இதன்போது கருத்துரைத்த சரித ஹேரத், முன்னர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மற்றும் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் எதிர்கொண்டது போன்ற நிலைமையே இப்போதும் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த கருத்தை சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் சிசிர ஜெயக்கொடி ஆகியோர் ஆமோதித்தனர் தமது கருத்தை வெளியிட்ட நாமல் ராஜபக்ச,அடுத்த 48 மணித்தியாலங்கள்; சோதனைக்குரிய காலம் என்று குறிப்பிட்டார்
கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, மொரட்டுவை நகர முதல்வர்; சமன்லால் பெர்னாண்டோவின் வீடு போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதாக தொலைபேசியில் செய்தி வந்தது.
அமைச்சர் சரத் வீரசேகர ஜனாதிபதி ராஜபக்சவிடம் நடந்து சென்று அவருக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள விடயத்தை தெரிவித்தார்.
நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெறவிருந்தது.
கட்சியின் மே தினக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து அங்கு ஆலோசிக்கப்படவிருந்தது.
எனினும் அலரிமாளிகை கூட்டம் முடிவடைய இரவாகிவிட்டதாலும், பயணம் செய்வதற்கு பாதுகாப்பற்றதாலும் இரண்டாவது நிகழ்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், ஒரு சிலர், பெரும்பாலும் பசில் ஆதரவாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஏர் இந்தியா விபத்து... லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை: அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள் News Lankasri

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
