துமிந்தவுக்கு மரண தண்டனை! மன்னிப்புக்கான காரணத்தை வெளிப்படுத்திய கோட்டாபய
துமிந்த சில்வாவிற்கு நான் பொதுமன்னிப்பை வழங்கவேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் ஆவணங்கள் காணப்பட்டன என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள சத்திய கடதாசியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு : கோட்டாபயவின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மறுப்பு
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்சவின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்திய கடதாசியில் மேலும், நாட்டின் நலனைகருத்தில் கொண்டே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார்.
எனக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் துமிந்த சில்வாவை சிறையில் வைத்திருப்பது அவரது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வேறு பல காரணங்களை முன்வைத்து அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எனக்கு விடுக்கப்பட்டமை நினைவில் உள்ளது.
துமிந்த சில்வாவிற்கு நான் பொதுமன்னிப்பை வழங்கவேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் ஆவணங்கள் காணப்பட்டன என அந்த சத்தியக் கடதாசியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
