அடையாளம் காணும் இடங்களை முடக்குங்கள்: கோட்டாபய உத்தரவு
நாட்டில் கோவிட் மரணங்களை தொடர்ந்தும் குறைப்பதற்கு எடுக்க கூடிய நடவடிக்கை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நேற்று கோவிட் தடுப்பு விசேட செயலணியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்கள் இன்னமும் அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இடங்களை தனிமைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri