முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்! சினிமா பாணியில் கோட்டாபய - ஆனால் நடப்பது?

Go Home Gota Advanced Agri Farmers Mission Sri Lanka Parliament Gotabaya Rajapaksa Sri Lanka
By S P Thas Apr 23, 2022 10:53 AM GMT
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ அதிகாரியாக இருந்தவர் என்ற வகையில், கொள்கையளவில் பிடிவாதங்களையும் இறுக்கமான போக்கினையும் காட்டி வருகின்றார்.

அந்தவகையில் முன்வைத்த காலைப் பின் வைக்கமாட்டேன் என்று சினிமா படத்தில் வரும் படையப்பா பாணியில் கூறிவருகின்றார். ஆனால் செயற்பாட்டு ரீதியில் பிடிவாத நிலைப்பாடுகள் தோல்வியடைகின்ற போதல்லாம் தனது கால்களை பின்நோக்கி வைக்கத் தொடங்கிவிட்டார்.

விவசாயத்துறையில் நஞ்சற்ற உணவு என்றார், அதற்காக பசுமைப்புரட்சி என்றார், அதனால் இரசாயனத்தை தடை செய்தார், விளைவு நெல்லுற்பத்தி பாரிய இழப்பைச் சந்தித்தது. விவசாயிகள் கொதிப்படைந்துள்ளார்கள். இப்போது ஜனாதிபதி சொல்கிறார் விவசாய உற்பத்தி விடயத்தில் இரசாயன வளமாக்கியைத் தடைசெய்தது தனது தவறு என்கிறார்.

இனி வருங்காலத்தில் இரசாயன வளமாக்கியை விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் சர்வதேச நாணயநிதியத்திடம்(IMF) நிபந்தனைகளுக்குப் பணிந்து கடன் பெறமாட்டோம் என்று இந்த அரசாங்கம் கூறியது. இப்போது அங்கு கடன் பெறுவதற்காக நிதியமைச்சர் அலிசப்ரி தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது. ஜனாதிபதி இப்போது சொல்கிறார்,இதனை முன்கூட்டியே செய்திருக்கலாம் என்று.

இந்தியாவுக்குத் கொழும்புத் துறைமுக முனையத்தை வழங்க முடியாது எனக்கூறிய இவ் அரசாங்கம் பின்னர் வழங்கிவிட்டது.

19ஆவது அரசியல் யாப்புத்திருத்தத்ததை நீக்கி 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார்கள். இப்போது 20ஐ நீக்கிவிட்டு 19ஆவது திருத்தத்தை ஒத்த 21ஆவது திருத்தத்தை விரைவில் இந்த அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கிறது.

அமைச்சரவையை ஓரிரு விதிவிலக்குகளுக்கு அப்பால் சிங்கள அமைச்சரவையாக அமைக்க முற்பட்டார்கள். அதன்படி அதாவுல்லாவுக்குக் கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. தற்போது பல்லினத்தவர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்டடுள்ளது.

புலம் பெயர்ந்த தமிழர்களையும் தமிழமைப்புகளையும் விடுதலைப்புலிகள் சார்ந்தவர்கள் என்று தடைசெய்தார்கள். இப்போது அவர்களை டொலர்களுக்காக நாட்டுக்குள் அழைப்பதற்கு தயார் நிலையில் உள்ளார்கள்.

அமெரிக்காவை வேண்டத்தகாத நாடாக எதிர்த்தார்கள்.பின்னர் மீன்சக்திப் பிறப்பாக்கல் திட்ட முதலீட்டுக்கு அணைத்துக்கொண்டார்கள்.

அடிப்படைவாத அரசியல் யாப்பினைப் புதிதாக் கொண்டுவர முயற்சித்தார்கள் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மொத்தத்தில் தற்போதைய ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டேன் என்று குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் முன்வைத்த கால்கள் ஒவ்வொன்றாய் பின்நோக்கி நகருகின்றன.

பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களால் தான் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களது அபிலாசைகளை தான் நிறைவேற்றப்போவதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இன்று சிங்கள மக்கள் தமது அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி காலிமுகத்திடல் உட்பட வீதிகளில் இறங்கி இயல்பூக்கத்தால் உந்தப்பட்டு தன்னெழுச்சிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இவற்றை அடக்க முடியாத நிலையில் ரம்புக்கனையில் பொலிஸார் துப்பாகிப் பிரயோகம் செய்துள்ளனர். இதில் 28 சிங்கள சகோதரர்கள் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் மரணித்துள்ளார். நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளார்கள். அந்தவகையில் சிங்களமக்களின் அபிலாசைகளையும் பாதுகாப்பையும் ஜனாதிபதியால் நிறைவேற்ற முடியவில்லை.

இதனால் ‘கோட்டா கோ ஹோம்’ (Gotta go home) என்ற கோசம் நாடுபூராக முழங்க ஆரம்பித்து விட்டது.காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக மக்களின் போராட்டம் 13 நாட்களாகத் தொடர்கிறது. இந்த நிலையில் ஜனாதிபதி வேகமாகத் தனது கால்களை பின் நோக்கி நகர்த்த வேண்டியவராக்கப்பட்டுள்ளார்.

பட்டறிவுகளைப் பரிகசித்தால் நட்டந்தான் நாட்டை அணைக்கும். விவசாயிகளின் பட்டறிவுக்கு செவிசாய்த்திருந்தால் விவசாயம் நட்டத்தில் மூழ்கியிருக்காது. இப்போது தான் ஜனாதிபதி அந்தப் பட்டறிவை விளங்கியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் இந்த நாடு புலம்பெயர்ந்த நம்முறவுகளின் சாதுரியத்தாலும் டொலர்களாலும் அபிவிருத்தியடையும் என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள முடியாதவராக உள்ளார் என்பதுதான் வேதனையான விடயமாகும்.

31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US