உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு கோட்டாபய நிதியுதவி! வெளியாகிய குற்றச்சாட்டு

CID - Sri Lanka Police Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation
By Indrajith Apr 15, 2025 02:13 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாவது ஆண்டு நிறைவை இலங்கை நினைவுகூரத் தயாராகி வருகிறது.

2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்ட உயிர்கள், காவு கொள்ளப்பட்டமைக்கு, இஸ்லாமிய தீவிரவாதக் குழு மீது உடனடியாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இருப்பினும், உளவுத்துறை கசிவுகள், தகவல் தெரிவிப்பவர்களின் சாட்சியங்கள் மற்றும் சூழ்நிலை நிதி தடயங்கள் ஆகியவற்றின் புதிய அலை, இந்தத் தாக்குதல் மிகவும் தீவிரமாக திட்டமிடப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவான வீதி விபத்துக்கள்: ஒருவயது குழந்தை உட்பட 5 பேர் பலி!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவான வீதி விபத்துக்கள்: ஒருவயது குழந்தை உட்பட 5 பேர் பலி!

இலங்கை அரசு

ஒருவேளை இலங்கை அரசிற்குள் இருக்கும் சக்திவாய்ந்த கூறுகளால் இது திட்டமிடப்பட்டதாகவும் தகவல்கள் இருப்பதாக கொழும்பின் ஆங்கில இணையச்செய்தி ஒன்று கூறுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு கோட்டாபய நிதியுதவி! வெளியாகிய குற்றச்சாட்டு | Gotabaya S Funding Of Easter Sunday Attacks

அதேநேரம் 2019 நவம்பரில் ஜனாதிபதியாக வருவதற்காக, கோட்டாபய ராஜபக்ச, தமது நெருங்கிய கூட்டாளி மூலம் தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதியளித்திருக்கலாம் என்ற மிகவும் வெடிக்கும் கூற்றும் வெளியாகியுள்ளது.

கொழும்பில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்களுக்கு கசிந்த ஒரு உளவுத்துறை அறிக்கையாக இது கருதப்படுகிறது இது உண்மை என நிரூபிக்கப்பட்டால், இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் குடும்பங்களில் ஒன்று குற்றவியல் விசாரணைக்கு உட்படவேண்டிய நிலை ஏற்படும் என்றும் இணையச் செய்தி குறிப்பிட்டுள்ளது.

மொனராகலையில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை

மொனராகலையில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படும் பெருந்தோட்டத்துறையின் ஒரு முக்கிய நபரே நிதியுதவிக்கான வழியாக செயற்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு கோட்டாபய நிதியுதவி! வெளியாகிய குற்றச்சாட்டு | Gotabaya S Funding Of Easter Sunday Attacks

கொழும்பில் உள்ள ஒரு சொகுசு விருந்தகத்தின், இயக்குநராகவும் பணியாற்றிய இந்த தொழிலதிபர், சீனி இறக்குமதி ஊழலில் இருந்து பயனடைந்ததாகக் கூறப்படுகிறது.

அவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு 65 மில்லியனுக்கும் அதிகமாக வழங்கியதாகக் கூறப்படுவதாக ஆங்கில இணையம் தெரிவிக்கிறது.

இந்த நிதி, வெடிபொருட்களை வாங்குவதற்கும்,குற்றவாளிகளின் பயணம் மற்றும் தங்குமிடங்களுக்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டில் தஞ்சம் கோரிய இரண்டு நடுத்தர தர புலனாய்வு அதிகாரிகள் உட்பட பலர், கோட்டாபய ராஜபக்சவுக்கு விசுவாசமான இலங்கையின் இராணுவ புலனாய்வின் ஒரு இரகசியப் பிரிவு, தாக்குதல் நடத்தியவர்களுக்கு முலோபாய ஆதரவை வழங்கியதாகக் கூறுகின்றனர்.

சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது நண்பர்களை, கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்புக்கு அடையாளம் காணப்படாத அரசாங்க வாகனங்களில் அழைத்துச் செல்வது, பாதுகாப்பான இடங்களில் தற்காலிக தங்குமிடம் வழங்குவது; தாக்குதல் நடத்தியவர்கள் கண்டறிவதைத் தவிர்க்க தகவல் தொடர்பு உபகரணங்களை வழங்குவது போன்ற உதவிகளையே, இராணுவ இரகசியப்பிரிவு தாக்குதல்தாரிகளுக்கு வழங்கியதாக ஆங்கில இணையம் குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US