தமிழ் மக்களுக்கு விதைத்த வினையை தற்போது அறுவடை செய்கிறார் கோட்டாபய: மணிவண்ணன்
தமிழ் மக்களுக்கு செய்த அவலத்திற்கான வினையினையே தற்போது கோட்டாபய ராஜபக்ச அறுவடை செய்து கொண்டிருக்கின்றார் என யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். துணவியில் நேற்று நடைபெற்ற உதைபந்தாட்ட நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டபின், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“வினை விதைத்தவன் வினையறுப்பான் திணை விதைத்தவன் திணையறுப்பான் என்றொரு பழமொழி உண்டு.
அதேபோல தான் 2009 க்கு முற்பட்ட காலப்பகுதியில் குறிப்பாக இறுதி யுத்தம் வன்னிப் பகுதியில் நடைபெற்றபோது தமிழ் மக்கள் பேரவலத்தை சந்தித்ததுடன் இருப்பிடமில்லாது ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலுக்கு சென்று பல்வேறு அவலங்களை சந்தித்தார்கள் இன அழிப்பை சந்தித்தார்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம்.
சர்வதேச சட்டங்களால் தண்டிக்கப்பட வேண்டும்
அந்த காலப்பகுதியிலே அதற்கெல்லாம் பெறுப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் தான் கோட்டாபய ராஜபக்ச. அந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களுக்கு பொறுப்பானவர் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மற்றும் யுத்த குற்றங்களுக்கு பொறுப்பானவர் என்று சர்வதேச சட்டங்களால் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டவர்.
இன்று தனது சொந்த மக்களாலேயே அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார். அவர் விதைத்த வினையை அறுவடை கொண்டிருக்கின்றார் என்று தான் நான் நினைக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளிவிவகார கொள்கையில் ஈழத் தமிழர்கள் தொடர்பில் முக்கிய மாற்றம்: சுரேன் சுரேந்திரன்(Video) |