கோட்டாபயவின் ஊழலை தொடர்ந்து முன்னெடுக்கும் அரசு: வெளிநாட்டிலிருந்து கசிந்திருக்கும் பயங்கர தகவல்கள்!
கொழும்பு 7இல் அமைந்துள்ள 93 வருடங்கள் பழைமையான (ஒட்டர் எகியுடிக் கிளப்) கழகத்திற்கு உரித்தான 150 பேர்ச்சஸ் காணியை கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து காலம் தொடக்கம் குத்தகைக்கு கொடுக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் திட்டம் கைவிட்டுப் போக ஜனாதிபதியான பின்னர் மீண்டும் 2019 ஆண்டு கிடைத்த சந்தர்ப்பமும் ஏற்பட்ட எதிர்ப்பால் நின்றுப் போனது. ஆனால் என்பிபி அரசாங்கம் குறித்த கிளப் காணியை 99 வருட குத்தகைக்கு வழங்க முயற்சிப்பதாக லண்டனை தலைமையகமாக கொண்டியங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டாபய தீட்டிய திட்டம்
இந்த குத்தகை கைமாற்றலால் அரசாங்கத்திற்கு 2 பில்லியனுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படப் போவதாக அதன் தலைவர் அஜித் தர்மபால தனக்கு கிடைத்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் பிரைமி லேன்ட் நிறுவன உரிமையாளரான பிரேமலாலுக்கு 99 வருட குத்தகைக்கு குறித்த கிளப்பின் காணியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் குறித்த காணியின் சந்தைப் பெறுமதியாக ஒரு பேர்ச்சுக்கு ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கொழும்பு 7 பிரதேசத்திலுள்ள காணியின் பெறுமதி மில்லின் கணக்காகும். ஆனால் அந்த திட்டம் கைவிட்டுப் போக அன்றைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்க அந்த காணியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.
குறித்த காணி அரசாங்கத்திற்கு சொந்தமானதாகும். அதன் பின்னர் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவும் முயற்சித்துள்ளார்.ஆனால் காரியம் ஆக வில்லை.
குறைத்து மதிப்பிடப்பட்ட பெறுமதி
அவ்வாறான ஒரு நிலையில் தான் இந்த அரசாங்கத்தில் குறித்த காணியை அதே பிரைமி லேன்ட் நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்க தீர்மானம் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு 7ல் அமைந்துள்ள அந்த காணியின் இன்றைய சந்தை பெறுமதி ஒரு பேர்ச் 300 இலட்சம் ஆகும்.ஆனால் அன்று கோட்டாபய ராஜபக்ச வழங்க தீர்மானித்த ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாவுக்கே வழங்கப்படவுள்ளன.

குறித்த காணியில் 150 பேர்ச்சஸ் காணப்படுகிறது.மேலும் அரசுக்கு சொந்தமான காணியாகும்.இவ்வாறு மக்களின் சொத்துக்களை சூறையாடுவோர் யார் என இந்த அரசாங்கம் அடையாளம் காண வேண்டும்.
அத்தோடு இது தொடர்பில் இலஞ்ச- ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam