நாளை மறுதினம் நாடு திரும்புகின்றார் கோட்டாபய ராஜபக்ச - வெளியாகியுள்ள தகவல்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Thailand
By Murali Sep 01, 2022 07:41 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) நாடு திரும்பத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய அவர் மாலைதீவு மற்றும் சிங்கப்பூர் வழியாக தாய்லாந்து சென்று அங்கு சில வாரங்களை கழித்தார்.

கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகளை அவர் அனுபவிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினம் நாடு திரும்புகின்றார் கோட்டாபய ராஜபக்ச - வெளியாகியுள்ள தகவல் | Gotabaya Rajapaksa Is Returning To The Country

பாதி காலம் முடிவதற்கு முன்பே பதவியை விட்டு விலகிய கோட்டாபய

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி வரலாற்றில் தனது பதவியை இராஜினாமா செய்த முதலாவது ஜனாதிபதியாகக் கருதப்படும் கோட்டாபய ராஜபக்ச, ஜூலை 13ம் திகதி அதிகாலையில் நாட்டை விட்டு வெளியேறினார்.

தனது பதவிக்காலத்தின் பாதி காலம் முடிவதற்கு முன்பே அவர் பதவியை விட்டு விலகினார். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்சவும் மாலை 4:30 மணியளவில் மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றதையடுத்து, மாலைதீவில் ஒரு நாள் மட்டுமே தங்கியிருந்த நிலையில், ஜூலை 14ம் திகதி சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இரண்டு வாரங்களுக்கு மாத்திரம் விசா வழங்குவதாக முதலில் தெரிவித்த சிங்கப்பூர் அரசாங்கம், பின்னர் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதனை நீட்டித்திருந்தது.

நாளை மறுதினம் நாடு திரும்புகின்றார் கோட்டாபய ராஜபக்ச - வெளியாகியுள்ள தகவல் | Gotabaya Rajapaksa Is Returning To The Country

சரியான தருணம் இன்னும் வரவில்லை 

பின்னர் ஆகஸ்ட் 11ம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் தனி விமானம் மூலம் தாய்லாந்துக்கு புறப்பட்டனர். தாய்லாந்தில் சுமார் 3 வாரங்கள் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், கடைசி நேரத்தில், பாதுகாப்பு தொடர்பான பல சிக்கல்கள் காரணமாக அவரது வருகை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுடன் நடத்திய கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவர் நாடு திரும்புவதற்கான சரியான தருணம் இன்னும் வரவில்லை என தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் அவரை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US