கோட்டாபய தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்ட சர்வதேச ஊடகம்
இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதன் பின்னர் அவரது பாதுகாப்பிற்காக தனி பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, AFP செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
தீவிர பாதுகாப்பு

அவரது பாதுகாப்பிற்காக கமாண்டோக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அடங்கிய பாதுகாப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 90 நாள் விசாவில் தாய்லாந்தில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
குழுவாக நாடு திரும்பும் கோட்டபாய

கோட்டாபயவுடன் அவரது மனைவி, உதவியாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் உள்ளனர், அதே குழுவும் ராஜபக்சவுடன் இலங்கை வரவுள்ளதாக AFP செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri