கோட்டாபய மற்றும் மகிந்தவைச் சமரசப்படுத்தும் நடவடிக்கை தோல்வி
மகிந்த குடும்பமும், கோட்டாபய குடும்பமும் போட்டிக்குப் போட்டியாகக் காலைவாரும் நடவடிக்கைகளில் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளதாக பல தரப்புகளில் இருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்சவின் கடந்த கால தான்தோன்றித்தனமான ஆட்சி காரணமாக மகிந்த குடும்பத்துக்கும், கோட்டாபய குடும்பத்துக்கும் இடையில் நீண்ட காலமாகப் புகைச்சல் இருந்து வருகின்றது.
இதை இப்படியே விட்டுவிட்டால் ராஜபக்ச ஆட்சி நிரந்தரமாகக் கைவிட்டுப் போய்விடும், ராஜபக்ச குடும்பம் வீழ்ச்சியடைந்துவிடும் என அஞ்சிய அந்தக் குடும்ப உறுப்பினர் ஒருவர் இவர்களையெல்லாம் ஒரே மேசைக்கு அழைத்து ஒற்றுமைப்படுத்துவதற்கான வேலை ஒன்றில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ராஜபக்சர்கள்
அவரது வீட்டில் இரவு விருந்தொன்றை ஏற்பாடு செய்து எல்லோருக்கும் அழைப்பு விடுத்துள்ள நிலையில் எல்லோரும் வருவதற்குச் சம்மதம் தெரிவித்தனர். இறுதியில் மகிந்த குடும்பம் காலைவாரிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருந்து இடம்பெற்ற அன்றைய தினம் மகிந்த, ஷிரந்தி, நாமல் ஆகியோர் தங்காலையில் உள்ள அவர்களின் வீட்டுக்குச் சென்று விட்டதாகவும் அவர்களைத் தவிர ஏனையவர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்தவின் மறுப்பு
கோட்டாபய கூட மனைவியுடன் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஒன்றுகூடலை நடத்தி ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு அந்தக் குடும்ப உறுப்பினர் முற்பட்டார். அதன்படி சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு ஒன்றுகூடலை அவர் ஏற்பாடு செய்தார்.
அந்த ஒன்றுகூடலில் முன் வர மகிந்த மறுத்துள்ளார். ஆனால் இந்த ஒன்றுகூடலில் ஷிரந்தி, நாமல் எல்லோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இருப்பினும் அதில் கோட்டாபயவும் அவரது மனைவியும் கலந்துகொள்ளவில்லை.
அந்த இடத்தில் குடும்பத்தில் சிலர் கோட்டாபயவின் பிழையான ஆட்சியை விமர்சிக்கத்
தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
