கோட்டாபயவிற்கு வழங்கப்பட்ட தவறான புலனாய்வு தகவல் - மைத்திரி

Parliament of Sri Lanka Gotabaya Rajapaksa Maithripala Sirisena Sri Lanka Budget 2023
By Steephen Nov 24, 2022 10:51 AM GMT
Report

கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட தவறான புலனாய்வு தகவல்களே அவர் நாட்டில் இருந்து வெளியேற காரணமாக அமைந்தது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Maithripala Sirisena-மைத்திரிபால சிறிசேன

பாதுகாப்பு படைகளை பலப்படுத்துவதன் மூலம் நெருக்கடிகளை தீர்க்க முடியாது

பாதுகாப்பு படைகளை வலுப்படுத்தி,படைகளுக்கு வசதிகளை வழங்கி,அவற்றுக்கு கட்டடங்களை வழங்குவதன் மூலம் நாட்டில் இருக்கும் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது. இதனை நாம் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

2019 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு என்ற பிரதான கோஷத்தை முன்வைத்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. நாட்டிற்கு பாதுகாப்பு இல்லாமல் போயுள்ளது என்று என்னை கடுமையாக விமர்சித்தனர்.

நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யுங்கள் எனக்கூறினர். தேசிய பாதுகாப்பு என்பதே அனைவரதும் கோஷமாக இருந்தது. ஈஸ்டர் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற சர்வதேச அமைப்பு செய்தது.

அரசியல் ரீதியான அதற்கான பொறுப்பை என் மீது சுமத்தினர். அதனை விடுத்து எவரும் எனக்கு அது பற்றிய தகவல்களையோ, கடிதங்களையோ முன்கூடியே வழங்கவில்லை. எனினும் அதனை என் மீது சுமத்தி பேசினர்.தற்போதும் பேசுகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் என்பது நாங்கள் மிகவும் கவலைக்கும் வருத்தத்திற்கும் உள்ளான சந்தர்ப்பம். அப்போது வந்த தகவல்கள், கடிதங்கள் அதிகாரிகள் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

அவர்கள் இடையில் பரிமாறிக்கொண்டார்களே அன்றி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் என்னிடம் எந்த தகவல்களையும் வாய்மொழி மூலமோ, கடிதங்கள் மூலமோ வழங்கவில்லை.

Maithripala Sirisena-மைத்திரிபால சிறிசேன

எனக்கு நேர்ந்ததே கோட்டாபய ராஜபக்சவுக்கும் நடந்தது

கோட்டாபய ராஜபக்சவுக்கு என்ன நடந்தது. எனக்கு நேர்ந்தது போலேவோ கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்டது. எனக்கு கிடைத்த தகவல்களின்படி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற நேரிட்ட நாளில் கொழும்புக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேரே வருவார்கள் என அவருக்கு புலனாய்வு தகவல்களை வழங்கி இருந்தனர்.

இதனால், 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேரே வருகின்றனர், அவர்களை கண்ணீர் புகை, தண்ணீர் தாக்குதல்களை நடத்தி கட்டுப்படுத்தி விடலாம் என கோட்டாபய ராஜபக்ச நினைத்தார்.

எனினும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொழும்புக்கு வந்தனர். இதனை பொலிஸாரும், இராணுவத்தினரும், கோட்டாபய ராஜபக்சவும் எதிர்பார்க்கவில்லை. நான்கு லட்சம் பேரை துப்பாக்கிச்சூடு நடத்தி கட்டுப்படுத்த முடியுமா?.

ஆனால், நடந்தது என்ன?நாட்டின் ஜனாதிபதி நாட்டில் இருந்து வெளியேற நேரிட்டது. பிரதமருக்கு ஒழிந்துக்கொள்ள நேரிட்டது. அமைச்சர்கள் எங்கு இருக்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போனது.

ஆளும் கட்சியில் உள்ள எனது நண்பர்களான அமைச்சர்கள் வெளிநாடுகளில் இருந்து என்னை தொடர்புக்கொண்டு தாம் இந்த நாடுகளில் இருப்பதாக கூறினர். 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேரே வருகின்றனர் என்று கோட்டாபய ராஜபக்சவுக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என அனைத்தையும் பிடித்துக்கொண்டனர். இதனால், பாதுகாப்பு படையினருக்கு நிதியை ஒதுக்குவதற்கு பதிலாக அவற்றை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.     

மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US