சுற்றிவளைக்கப்பட்ட வீடு! கப்பல் மூலம் திருகோணமலைக்கு சென்ற கோட்டாபய - வெளியான தகவல்
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்த காலத்தில் அவர் போராட்டத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீரிஹானவில் உள்ள அவரின் வீட்டை சுற்றிவளைத்து ஆரம்பித்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றும் நிலைமைக்கு போனது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியும் பதிவி விலக நேரிட்டது. அன்று அவர் நாட்டை விட்டு போயிருக்காவிட்டால் அவர் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டார். அன்று அவர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு போயிக்காவிட்டால் அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,