கோட்டாபய ஆட்சிக் கவிழ்ப்பு:சகோதரர்களிடையே ஏற்பட்ட குழப்பமா!
பொருளாதார நெருக்கடி மற்றும் வக்குரோத்து நிலைமை ஏற்படுவதற்கான சூழலை நிதியமைச்சும் இலங்கை மத்திய வங்கியுமே ஏற்படுத்தியுள்ளன.
2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ச பின்னர் வந்த பெசில் ராஜபக்ச ஆகியோருக்கு சர்வதேச் நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவித்தும் தனது சகோதரினின் ஆட்சி கவிழ்ப்புக்கு ஏன் வழிவகுத்தனர் என்ற பெரும் சந்தேகத்தை மஹிந்த சிறிவர்தன எழுதிய (SRI LANKAS ECONOMIC REVIVAL) நூல் ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்த சிறிவர்தன இன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளரும் கோட்டாபய ஆட்சியில் நிதியமைச்சின் செயலாளராக செயற்பட்டுள்ளார்.இவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் பெசில் ரஜபக்சவுடன் நிதியமைச்சில் பணியாற்றியவராவார்.
சகோதரர்களின் சதித்திட்டமா?
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி (SRI LANKAS ECONOMIC REVIVAL) பொருளாதார நெருக்கடி மற்றும் வக்குரோத்து அதனோடு இணைந்து மேற் கொண்ட அரகலய போராட்டம் தொடர்பில் பல விடயங்கள் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொருளாதர நெருக்கடியின் ஆரம்ப புள்ளிவிபரங்களை நிதியமைச்சருக்கு தெரியப்படுத்தி உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்தும் உள்நாட்டு தீர்வொன்றை ஏன் தேடினார்கள் என்ற காரணத்தை உதாரணங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தில் சகோதரர்களிடையே ஏன் இவ்வாறான வேறுபாடுகள் ஏற்பட்டன என்ற சந்தேகத்துக்கு விடை தெரியவில்லை.அக்காலத்தில் மஹிந்த ராஜபக்ச அரசில் அக்கறையான ஈடுபாடு காட்டவில்லை எனவும் குறிப்பிடுகிறார்.
அரகலய போராட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி நெருக்கடி தொடர்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன.ஆனால் இவர் குறிப்பிட்ட காரணங்கள் தெரியப்படுத்தப்படவில்லை.

முதல் நூல் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எழுதினார்.அடுத்து சேனதோரதெனிய ஆகியோர் முன்னாள் அமெரிக்க துதுவர் ஜுலி சங்கை குறிப்பிட்டுள்ளனர்.
ரணிலின் ஊடகச் செயலாளர் சுனந்த மத்தும பண்டாரவின் நூல்.பின்னர் கோட்டாபய ராஜபக்சவின் நூல் அவரும் இது தொடர்பில் தெரியப்படுத்தவில்லை.
இறுதி நூல் அசங்க அபேகுணசேக்கரவின் அது CIAயை தொடர்பு படுத்தி எழுதப்பட்டிருந்தது. ஆனால் மஹிந்த சிறிவர்தனவின் நூல் சகோதர்கள் தொடர்பில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam