தன்னுடைய முடிவால் வருத்தத்தில் கோட்டாபய! தயார் நிலையில் பசில் - வெளியான தகவல்
நாட்டுக்காக அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதை எண்ணி வருந்திக் கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் தானும் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்பது மக்களின் தற்போதைய தேவையல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் தேவை ஏற்படின் இரட்டை குடியுரிமை குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன பெருபான்மை கொண்ட கட்சியாகக் காணப்படுகின்றது என்பதற்காக பொறுப்புக் கூற வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,