ரோபோக்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபிட் தனது தலைமையகத்தில் உள்ள உணவகத்தில் சுத்தம் செய்யும் பணியை செய்து வரும் 100 ரோபாக்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது போன்ற பணிகளை ரோபோக்கள் செய்து வருகின்றன.
இந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 100 ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், செலவைக் குறைப்பதற்காக உணவு விடுதி மேசைகளைச் சுத்தம் செய்யவும், குப்பைகளைத் தனித்தனியாக்கவும், கதவுகளைத் திறக்கவும் பயிற்சி பெற்ற ரோபோக்களை நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் தொடர்பு இயக்குனர் டெனிஸ் காம்போவா தெரிவிக்கையில், தினசரி ரோபோக்கள் இனி எழுத்துக்களுக்குள் தனித் திட்டமாக இருக்காது. சில தொழில்நுட்பங்களும் குழுவின் ஒரு பகுதியும் கூகுள் ரிசர்ச்சில் இருக்கும் ரோபாட்டிக்ஸ் முயற்சிகளில் ஒருங்கிணைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.