வற் வரி திருத்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள், சேவைகள்
நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வற் வரி திருத்த சட்டம் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டத்தில் பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தை பால் மா, அரிசி, அரிசி மா மற்றும் பாண் ஆகியவை வற் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
மின்சாரம் மற்றும் மின்சார விநியோகம், கச்சா எண்ணெய், மண்ணெண்ணெய், அழகுசாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், ஆகியவற்றுக்கு வற் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வற் வரி
மேலும், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், மற்றும் காது கேட்கும் கருவிகளுக்கும் வற் இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை அறைக் கட்டணம் தவிர மருத்துவமனை பராமரிப்பு சேவைகள், ரசாயன உரங்கள் தவிர மற்ற உரங்கள் மற்றும் கைத்தறி ஆடைகளும் வற் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா போக்குவரத்து வாகனங்கள் தவிர, பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் நிதி சேவைகள் ஆகியவையும் வற் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
You may like this

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 19 மணி நேரம் முன்

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri
