ஜெர்மனியில் வாடகைக்கு குடியிருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி
ஜெர்மனியில் வாடகைக்கு குடியிருப்பவர்களை வீட்டை விட்டு வெளியேற்றும் செயன்முறையை கடுமையாக்க அரசாங்கம் விரும்புகின்றது.
ஜெர்மனியில் வாடகைக்கு குடியிருப்போர் அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் தற்போது வாடகைக்கு குடியிருப்பவர்களை அகற்ற வேண்டுமானால் அவர்களுக்கு 1 மாத கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.
கால அவகாசம்
இந்நிலையில், இந்த கால அவகாசத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் வாடகைக்கு தங்கியிருப்பவர்கள் கடந்த காலங்களில் அதிகளவான வெளியேற்றங்களை சந்தித்திருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில், சுமார் 100,000 குடும்பங்கள் ஆண்டுதோறும் வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றத்தை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri