இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான தகவல்
2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்பு செயல்முறையை அநுர அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி, வரை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வழங்கப்படும் என்று பிரதியமைச்சர் தெரிவித்தார்.
ஓய்வூதிய உயர்வு
இதற்கிடையில், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக ஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதியமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
