யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜேர்மனிக்கு மகிழ்ச்சியான செய்தி
நடைபெற்றுவரும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், இன்று இங்கிலாந்துடன் ஜேர்மனி மோத உள்ள நிலையில், ஜேர்மனி ஜெயிக்கும் என்று ஆருடம் கூறியுள்ளது யசோதா.
யசோதா ஒரு ஆசிய பெண் யானை. அது ஜேர்மனியின் Hamburg உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வருகிறது.
42 வயதான யசோதா, ஜேர்மனி பங்குபெறும் கால்பந்து போட்டிகள் விடயத்தில் மிகத்துல்லியமான முடிவுகளைக் கூறும்.
முதலில், பிரான்சிடம் தோற்கும் ஜேர்மனி, போர்ச்சுகல்லை வெல்லும் என சரியாக கணித்திருந்தது யசோதா.
பிறகு, ஆச்சரியப்படத்தக்க விதமாக, ஹங்கேரிக்கு எதிரான போட்டி ட்ரா ஆகும் என்றும் கணித்தது யசோதா.
இந்நிலையில், இன்று இரவு ஜேர்மனி இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், ஜேர்மனி இங்கிலாந்தை வெல்லும் என கணித்துள்ளது யசோதா.
இந்த செய்தியைக் கேட்டு ஜேர்மனி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கு முன் நடந்தது போலவே இம்முறையும் யசோதாவின் ஆருடம் பலிக்குமா? பார்ப்போம்!
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri