வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுக்கு நற்செய்தி! ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டம்
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களை ஒரே இணையத் தளத்தினுள் ஒன்றிணைக்கும் செயற்பாடுகளை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு முன்னெடுத்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் தனித்தனியான இணையத்தளங்களை கொண்டிருப்பதன் காரணமாக அவற்றைத் தொடர்பு கொள்வதில் புலம்பெயர் இலங்கையர் உள்ளிட்ட பல தரப்பினரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
தூதரக அதிகாரிகளை இலகுவாக அணுகும் சேவை
அதனை நிவர்த்தி செய்யும் வகையில் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களையும் ஒரே இணையத்தளத்தில் ஒருங்கிணைக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் முதற்கட்டமாக தற்போதைக்கு புதுடெல்லி, மாலைத் தீவு, நியூசிலாந்தின் வெலிங்க்டன் உள்ளிட்ட 07 இடங்களில் அமைந்திருக்கும் இலங்கைத்தூதரகங்கள் ஒரே இணையத்தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் உள்நாட்டில் வசிப்போர், புலம்பெயர் இலங்கையர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தூதரக அதிகாரிகளை இலகுவாக அணுகவும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri