கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது
சுமார் 28 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்திய நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவினரும், சுங்கப் பிரிவினரும் இணைந்து இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சுங்கத் தீர்வையற்ற வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் 28 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை, விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் அல்லது டுபாயில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்கம்
11 கிலோ கிராம் எடையுடைய 24 கரட் தங்கம் நுட்மான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு விமான சேவையொன்றுக்கு சொந்தமான விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கத்தை குறித்த முகாமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த முகாமையாளர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கத்தை வெளியே எடுத்துச் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஏழு கிலோ கிராம் எடையுடைய தங்கத்துடன் விமான நிலையத்தில் வைத்து மூன்று இந்தியர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூர் அல்லது டுபாயிலிருந்து தங்கம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri