கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது
சுமார் 28 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்திய நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவினரும், சுங்கப் பிரிவினரும் இணைந்து இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சுங்கத் தீர்வையற்ற வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் 28 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை, விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் அல்லது டுபாயில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்கம்
11 கிலோ கிராம் எடையுடைய 24 கரட் தங்கம் நுட்மான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு விமான சேவையொன்றுக்கு சொந்தமான விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கத்தை குறித்த முகாமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த முகாமையாளர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கத்தை வெளியே எடுத்துச் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஏழு கிலோ கிராம் எடையுடைய தங்கத்துடன் விமான நிலையத்தில் வைத்து மூன்று இந்தியர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூர் அல்லது டுபாயிலிருந்து தங்கம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri