முல்லைத்தீவில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி
முல்லைத்தீவு (Mullaitinu) முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் தவறான நடத்தைக்கு உள்ளான 14 வயதுடைய சிறுமி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த 11ஆம் திகதி (11.06.2024) முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் அவர் தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
இந்நிலையில், சிறுமியிடம் சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுமியை கடந்த நான்காம் மாதம் முள்ளியவளை பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான நடத்தைக்கு உள்ளாக்கியமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சிறுமியின் வீட்டிலே இடம்பெற்றுள்ளது.

இளைஞனை இனம் காட்டிய சிறுமி தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு இளைஞனை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட வேளை குறித்த இளைஞன் கிராமத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி உளநல சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan