வெளிநாட்டு பெண்ணின் வேட்புமனு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை - கலேவல பகுதியில் போட்டியிடவிருந்த இலங்கை குடியுரிமை பெற்ற ஜேர்மன் பெண்ணின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகளின்படி, அந்தப் பெண் மாத்தளையில் உள்ள கலேவல பிரதேச சபைக்கு போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது, இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட முன்வந்தது முதல் முறையாகும்.
சுயேச்சை வேட்பாளர்
ஒரு சுயேச்சைக் குழுவிலிருந்து வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனுக்களை சமர்ப்பித்த பிறகு, 'சுது நோனா' என்று அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், அடிமட்டத்திலிருந்து மாற்றங்களைக் கொண்டு வருவதற்காகப் போட்டியிடுவதாகக் கூறினார்.
தான் உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், கலேவல பிரதேச சபையில் உயர் பதவிகளுக்கும் கீழ்நிலை பதவிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே தனது நோக்கம் என்றும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது, அவரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |