ஜெனிவாவில் நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்தி எம் மக்களுக்கு கிடைக்க வேண்டும்: ஜாட்சன் பிகிராடோ (Photos)
வடக்கு, கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (14.09.2022) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவது மற்றும் அவர்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு, அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் திருடி செல்லப்பட்டுள்ளன.
துரித நடவடிக்கைகள்
இந்த சம்பவங்கள் குறித்து அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு சர்வதேசமும் எமக்காக குரல் கொடுக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்கள் கௌரவமான உரிமைகளுடன் வாழ வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
பயங்கரவாத தடைச்சட்டம்
அறவழி போராட்டக்காரர்களை கைது செய்து அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டிப்பது ஆபத்தான விடயமாகும்.
வடக்கு, கிழக்கில் சுமார் 30 வருடங்களுக்கு மேல் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர். அவர்களின் வலியும், வேதனையும் எமக்குத் தான் தெரியும்.
மேலும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நாம் எதிர்பார்க்கின்ற நல்ல செய்தி எம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.





பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
