பொது அறிவு வினாத்தாள் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
பொது அறிவு வினாத்தாள் பரீட்சைக்கு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு தோற்றுமாறு அழுத்தம் கொடுப்பது சிக்கலானது என்று சுகாதார பணியாளர்கள் மையம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத செயல்
அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவு ஒரு சட்டவிரோத செயல் என்று அதன் அமைப்புச் செயலாளர் வைத்தியர் நிலான் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களால், துணை சுகாதார பட்டதாரிகள் பொது அறிவு தேர்வில் பங்கேற்பதை கட்டாயமாக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், துணை சுகாதார பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் போது இதுபோன்ற பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெல்லனா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
