உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சை (GCE A/L) பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.
குறித்த தகவலை இலங்கை பரீட்சை திணைக்களம் (Department of Examinations) வெளியிட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை (GCE A/L) கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன் 342,883 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
விடைத்தாள் மதிப்பீடு பணி
இந்நிலையில், பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளும் தொடரும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த (Susil Premjayantha) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
